கோவை : கோவையில் உயர்கல்வி தொடர்பான உயர்கல்வி இயக்கிகள் 3.0 : தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, போட்டியிடுதல் என்ற தலைப்பிலான இரண்டு நாட்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
கோவை : கோவையில் உயர்கல்வி தொடர்பான உயர்கல்வி இயக்கிகள் 3.0 : தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, போட்டியிடுதல் என்ற தலைப்பிலான இரண்டு நாட்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
கோவை மாவட்டம், ரெசிடன்ஸி ஓட்டலில் நேற்று கோவை மண்டல இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சி.ஐ. ஐ.,) ம் சார்பில், உயர்கல்வி தொடர்பாக இரண்டு நாட்கள் மாநாடு தொடங்கியது. அந்த மாநாட்டில் "உயர்கல்வி இயக்கிகள் 3.0: தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, போட்டியிடுதல்" ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதையடுத்து, அந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களில் உள்ள நிர்வாக இயக்குனர்கள், செயலாளர்கள், கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 200 பேர் பங்கேற்றனர். கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் மற்றும் என்.ஜி.ஓ.,க்களை சேர்ந்த 20 -க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் கருத்துரை வழங்குகின்றனர்.
இதில் சிறப்பு விருந்தினரான டைட்டன் நிறுவனத்தின் துணைத்தலைவரும், தலைமை டிசைன் அதிகாரியுமான ரேவதி காண்ட் பேசுகையில், ''மாணவர்கள், ஆசிரியர், வேலைக்குச் செல்வோர் என அனைவரும் தினந்தோறும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்கத் தொடங்கினாலே, நிறைய புது விஷயங்கள் நமது கவனத்துக்கு வரும்'' என்றார்.
மேலும், சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் ரமேஷ், சி.ஐ.ஐ., கல்விப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் அலமேலு ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம், ரெசிடன்ஸி ஓட்டலில் நேற்று கோவை மண்டல இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சி.ஐ. ஐ.,) ம் சார்பில், உயர்கல்வி தொடர்பாக இரண்டு நாட்கள் மாநாடு தொடங்கியது. அந்த மாநாட்டில் "உயர்கல்வி இயக்கிகள் 3.0: தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, போட்டியிடுதல்" ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதையடுத்து, அந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களில் உள்ள நிர்வாக இயக்குனர்கள், செயலாளர்கள், கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 200 பேர் பங்கேற்றனர். கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் மற்றும் என்.ஜி.ஓ.,க்களை சேர்ந்த 20 -க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் கருத்துரை வழங்குகின்றனர்.
இதில் சிறப்பு விருந்தினரான டைட்டன் நிறுவனத்தின் துணைத்தலைவரும், தலைமை டிசைன் அதிகாரியுமான ரேவதி காண்ட் பேசுகையில், ''மாணவர்கள், ஆசிரியர், வேலைக்குச் செல்வோர் என அனைவரும் தினந்தோறும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்கத் தொடங்கினாலே, நிறைய புது விஷயங்கள் நமது கவனத்துக்கு வரும்'' என்றார்.
மேலும், சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் ரமேஷ், சி.ஐ.ஐ., கல்விப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் அலமேலு ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.