கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

கோவை : கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேசன் அரிசியை மாவட்ட வழங்கல் அலுவல அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை : கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேசன் அரிசியை மாவட்ட வழங்கல் அலுவல அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சார்பில் வழங்கப்படும் ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்பட்டுச் சென்று அங்கு 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடத்தி செல்லப்படும் ரேசன் அரிசிக்கு கேரளாவில் நல்ல விலை கிடைப்பதால் கடத்தல் காரர்கள் பல்வேறு வகையான யுக்திகளை கையாளுகின்றனர். ரயில்கள் மூலம் அதிக அளவில் அரிசி கடத்தப்படும் தகவல் அறிந்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் இன்று கிடைக்க பெற்ற ரகசிய தகவலின்படி, எட்டிமடை ரயில் நிலையம் மற்றும் க.க.சாவடி பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

எட்டிமடை ரயில் நிலையத்தில் 700 கிலோவும், க.க.சாவடி பேருந்து நிலையத்தில் 300 கிலோ என மொத்தம் 1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 30000 ஆகும்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...