கோவையில் உளவுத்துறை அதிகாரியென போலி ஆவணங்களுடன் சுற்றிய நபர் கைது : போலியான ஆவணங்கள், ஏர்கன் பறிமுதல்

கோவை : தொண்டாமுத்தூர் அருகே உளவுத்துறை அதிகாரி என போலியாக தயாரித்த ஐடி கார்டு மற்றும் ஏர்கன்னுடன் சுற்றித் திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : தொண்டாமுத்தூர் அருகே உளவுத்துறை அதிகாரி என போலியாக தயாரித்த ஐடி கார்டு மற்றும் ஏர்கன்னுடன் சுற்றித் திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராமன் ஐயர் (48). இவர் கடந்த சில வருடங்களாக தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உளவுத்துறை அதிகாரி என பொதுமக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். 



இந்நிலையில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே ஏர்கன் துப்பாக்கியுடன் ஒரு நபர் சுற்றி வருவதாக பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து வந்த தொண்டாமுத்தூர் காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த விஜயராமன் ஐயரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில் காவல்துறையிடமே, விஜயராமன் தான் மத்திய உளவுப்பிரிவு 'ரா' அமைப்பில் பணி செய்து வருவதாகவும், இஸ்ரேல் நாட்டின் மொசாத் பிரிவில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் மத்திய உளவு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். 

மேலும், அவரை வடவள்ளி காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் போலியான உளவுத்துறை ஐடி கார்டை தயாரித்து வைத்துக்கொண்டு, ஏர்கன்களுடன் சுற்றி வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, விஜயராமன் ஐயர் வைத்திருந்த போலியான ஆவணங்கள் மற்றும் ஏர்கன்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...