கோவை : கோவையில் வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியினை வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார்.
கோவை : கோவையில் வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியினை வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

அப்பகுதிகளில் பதிவாகும் வாக்குகளைக் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்துப் பாதுகாப்பாக எண்ணத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாகத் தடுப்புகள் அமைப்பது தொடர்பாக அலுவலர்களிடம், மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

அப்பகுதிகளில் பதிவாகும் வாக்குகளைக் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்துப் பாதுகாப்பாக எண்ணத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாகத் தடுப்புகள் அமைப்பது தொடர்பாக அலுவலர்களிடம், மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.