இரு வாரங்களில் சராசரி விலையில் ரூ.5 வீழ்ச்சி : நீலகிரி தேயிலை விவசாயிகள் அதிருப்தி

நீலகிரி : டீசர்வ் தேயிலை ஏலத்தில் இரு வாரங்களில் சராசரி விலையில் கிலோவுக்கு, ரூ.5 விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீலகிரி : டீசர்வ் தேயிலை ஏலத்தில் இரு வாரங்களில் சராசரி விலையில் கிலோவுக்கு, ரூ.5 விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை தூள் குன்னூர் 'டீசர்வ்' ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டுக்கான 50 -வது ஏலத்தில், இலை ரகம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 380 கிலோ, டஸ்ட் ரகம் 1 லட்சத்து, 46 ஆயிரத்து 665 கிலோ என மொத்தம், 3 லட்சத்து 31 ஆயிரத்து 35 கிலோ விற்பனைக்கு வந்தது.



கடந்த இரண்டு வாரத்தினை இந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், ஏலத்தில் 10 ஆயிரம் கிலோ மட்டுமே வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இலை மற்றும் டஸ்ட் ரகங்கள் 99.90 சதவீதம் விற்பனையாகின. இருப்பினும், கிலோவுக்கு ரூ.89.22 மட்டுமே சராசரி விலை கிடைத்தது. இரண்டு வார ஏலத்தை ஒப்பிடும் போது, கிலோவிற்கு ரூ.5 வரை சராசரி விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

மேலும், மொத்த தேயிலை விற்பனையால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 7 ஆயிரத்து 968 வரவு கிடைத்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக தேயிலை விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...