கோவையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியவர்களிடம் பணத்தை திருப்பிப் பெற்று தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு

கோவை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணத்தை திருப்பிப் பெற்று தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.

கோவை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணத்தை திருப்பிப் பெற்று தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். 

செல்வபுரம் செளடேஸ்வரி காலனி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் உக்கடம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி குஞ்சுமோன், சாந்தி, காயத்திரி ஆகியோர் தன்னிடம் இருந்து ரூ.86 ஆயிரம் பெற்று கொண்டு தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இது குறித்து அவர் கூறுகையில், "மோசடியில் ஈடுபட்ட குஞ்சுமோன் என்னை அணுகி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகளில் உங்களுக்கும் வீடு வாங்கித் தருகிறேன் எனக் கூறினார். இதற்காக 2011 -ம் ஆண்டு முன்பணமாக ஒரு தொகை பெற்றது மட்டுமில்லாமல், தவணைகளாக ரூ.76 ஆயிரம் பணத்தை குஞ்சுமோன், அவரது மனைவி சாந்தி மற்றும் காயத்திரி ஆகியோர் பெற்று கொண்டனர். 

இதையடுத்து, வீடு வாங்கித் தராத காரணத்தால் பணத்தை திருப்பிக் கேட்டபோது, 'நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது உங்களால் ஆனதைப் பார்த்து கொள்ளுங்கள்,' என என்னை மிரட்டினார்," என்றார். 

மேலும், தங்களை ஏமாற்றி பணம் பெற்றவரிடமிருந்து இழந்த பணத்தை திருப்பிப் பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதேபோலவே, பணத்தைக் கொடுத்து ஏமாந்த 5 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரும், வீடு வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...