கிறிஸ்தவ ஆலயத்திற்கு உரிய இடத்தைச் சொந்தம் கொண்டாடிய அதிகாரிகள் : சாலை மறியலில் ஈடுபட்ட சவுரிபாளையம் மக்கள்

கோவை: சவுரிபாளையம் பள்ளியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சொந்தமான இடத்தை, அரசுக்கு பாத்தியப்பட்ட இடம் என்று அதிகாரிகள் கூறியதால் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை: சவுரிபாளையம் பள்ளியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சொந்தமான இடத்தை, அரசுக்கு பாத்தியப்பட்ட இடம் என்று அதிகாரிகள் கூறியதால் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



சவுரிபாளையம் பகுதியில் சபேரியா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் பங்காளர்களாக உள்ளனர். இந்த ஆலயத்துக்குச் சொந்தமாக கல்லறை வீதியில் உள்ள இடமானது கடந்த 1968 -ல் அரசால் ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த இடத்திற்கு அருகிலேயே ஆலய கட்டுப்பாட்டில் செயல்படும் பிலோமீனால் பள்ளியானது இயங்கி வருகின்றது. இந்தச் சூழலில், இன்று ஆலய கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்திற்கு தெற்கு வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சென்றனர். மேலும், ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில், "இந்த இடம் அரசுக்குச் சொந்தமான இடம்" என்று திடீரென பெயர் பலகையை வைத்தனர். 



இதையடுத்து, ஆலயத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வந்த வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு பலகையை அகற்றினர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...