இயற்கை வளத்தைப் பாதுகாக்க 40,000 km மிதிவண்டி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இளைஞர் உடுமலை வருகை

திருப்பூர் : உடுமலையில் உடல் ஆரோக்கியம் மற்றும் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி 40 ஆயிரம் கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணம் மேற்கொண்ட சேலம் இளைஞர் உடுமலை வந்தடைந்தார்.


திருப்பூர் : உடுமலையில் உடல் ஆரோக்கியம் மற்றும் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி 40 ஆயிரம் கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணம் மேற்கொண்ட சேலம் இளைஞர் உடுமலை வந்தடைந்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இயற்கை வளத்தைப் பாதுகாக்க, உடல் ஆரோக்கியத்தைப் பேணி காக்க மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ராஜராஜன் என்ற இளைஞர் சுற்று பயணம் மேற்கொண்டார். 

கடந்த 2017 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் சேலத்தில் தொடங்கி ஆந்திரா, ஓரிசா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மிதிவண்டியில் சென்றுள்ளார். அந்த பயணத்தின் ஒருபகுதியாக தற்பொழுது உடுமலை வழியாக வந்து, கர்நாடக செல்லும் ராஜராஜனுக்கு மாணவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 



இதையடுத்து, ராஜராஜன் மாணவ மாணவியர்களுக்குத் துண்டு அறிக்கைகள் வழங்கி மிதிவண்டி பயணத்தின் நோக்கம் குறித்து எடுத்து உரைத்தார். மேலும், இந்த மிதிவண்டி பயணம் உடுமலையிலிருந்து கர்நாடக சென்று, பின்பு கோவா வழியாக ஜம்மு காஷ்மீர் சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து சேலத்தில் முடிவடைகிறது.

மேலும், இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெஞ்சமீன் உட் என்பவர் 18 ஆயிரம் கி.மீ மிதிவண்டியில் பயணம் செய்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. அதனை முறியடிக்கும் வகையில் தற்பொழுது சேலம் இளைஞர் 10 -க்கும் மேற்பட்ட மாநிலங்கள் 20 ஆயிரம் கி.மீ மேல் பயணம் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...