கோவை : சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளித்ததாக விவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள், விவாதம் முற்றிய நிலையில் மருத்துவமனையின் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியுள்ளனர்.
கோவை : சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளித்ததாக விவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள், விவாதம் முற்றிய நிலையில் மருத்துவமனையின் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவரது மகன் முகம்மது ரபீக் (29). நேற்றிரவு வயிற்று வலி காரணமாக வி.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முகம்மது ரபீக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, இவரின் இறப்புக்கு தவறான சிகிச்சை தான் எனக் கூறி அவரது உறவினர்கள் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த விவாதம் முற்றிய நிலையில் உறவினர்கள் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.