கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு : கலவரத்தில் ஈடுபடுபவர்களை கலைப்பது போல் போலீசார் ஒத்திகை

கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் உபகரணங்களை போலீஸ் ஐ.ஜி. கே.பெரியய்யா வருடாந்திர ஆய்வு செய்தார்.

கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் உபகரணங்களை போலீஸ் ஐ.ஜி. கே.பெரியய்யா வருடாந்திர ஆய்வு செய்தார். 



கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் உபகரணங்கள் வருடாந்திர ஆய்வு செய்யும் பணி போலீஸ் பயிற்சிக்கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கே.பெரியய்யா பங்கேற்று உபகரணங்களை ஆய்வு செய்தார்.



ஆயுதப்படை போலீஸார் 600 பேரின் அணிவகுப்பு நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார். போலீஸாரின் 250 வாகனங்களின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார். 



பின்னர், போலீஸார் கலவர ஒத்திகை நடத்தினர். போலீஸாரின் ஒரு குழுவினர் பிரிந்து கலவரத்தில் ஈடுபடுவது போல் ஒத்திகை செய்தனர். மற்றொரு குழு போலீஸார், அவர்களை கலைக்கும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஒத்திகையில் ஈடுபட்டனர். 



தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும், லத்தியால் தாக்கியும் கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கலைப்பது போல் போலீஸார் ஒத்திகை செய்து காண்பித்தனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...