கோவை : கர்நாடக மாநிலம் மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீறுவதாக இருப்பதாகவும், மத்திய அரசு ஒரு பக்கம் சாராமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டுமெனவும் பா.ம.க தலைவர் ஜி.கே மணி கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை : கர்நாடக மாநிலம் மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீறுவதாக இருப்பதாகவும், மத்திய அரசு ஒரு பக்கம் சாராமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டுமெனவும் பா.ம.க தலைவர் ஜி.கே மணி கோரிக்கை வைத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கோவை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி கலந்துகொண்டார்.
அதில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே மணி கூறுகையில், "தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாக இருக்கக்கூடிய காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
மேலும், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு என அனைத்தையும் உதாசனப்படுத்திவிட்டது.இது தமிழகத்தின் உரிமையை மீறுவதாக இருக்கிறது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்யாமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்." என்றார்.

மேலும், செய்தியாளர்கள் 5 மாநில தேர்தல் முடிவுகளையும், ஸ்டெர்லைட் திறக்க அளித்த அனுமதியும் குறித்து கேட்டதற்கு, "மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அவஸ்தையின் வெளிப்பாடே ஜந்து மாநில தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த தோல்வி. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்திருந்தாலும் திறக்க விடமாட்டோம் என மாநில அரசு கூறிய சவால் என்ன ஆனது," என பதில் கேள்வி எழுப்பினார்.
பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கோவை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி கலந்துகொண்டார்.
அதில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே மணி கூறுகையில், "தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாக இருக்கக்கூடிய காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
மேலும், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு என அனைத்தையும் உதாசனப்படுத்திவிட்டது.இது தமிழகத்தின் உரிமையை மீறுவதாக இருக்கிறது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்யாமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்." என்றார்.

மேலும், செய்தியாளர்கள் 5 மாநில தேர்தல் முடிவுகளையும், ஸ்டெர்லைட் திறக்க அளித்த அனுமதியும் குறித்து கேட்டதற்கு, "மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அவஸ்தையின் வெளிப்பாடே ஜந்து மாநில தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த தோல்வி. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்திருந்தாலும் திறக்க விடமாட்டோம் என மாநில அரசு கூறிய சவால் என்ன ஆனது," என பதில் கேள்வி எழுப்பினார்.