நீலகிரி : உதகை நகரில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் பார்க்கிங் தளம் அமைக்கும் பணிக்காக நிலம் ஆய்வு செய்யப்பட்டது.
நீலகிரி : உதகை நகரில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் பார்க்கிங் தளம் அமைக்கும் பணிக்காக நிலம் ஆய்வு செய்யப்பட்டது.
சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் பெரும்பாலானோர் சொந்த வாகனங்கள் வைத்துள்ளனர். இதனால், குறுகிய நகரமான உதகையில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளுர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய பார்க்கிங் தளங்களை அமைக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பல ஆண்டுகளாக நிலவி வரும் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் ஒரு பகுதியில் பார்க்கிங் தளம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, உதகை கோட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் அரசு அதிகாரிகள் இன்று நிலத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். வரும் கோடை சீசனுக்குள் பார்க்கிங் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் பெரும்பாலானோர் சொந்த வாகனங்கள் வைத்துள்ளனர். இதனால், குறுகிய நகரமான உதகையில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளுர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய பார்க்கிங் தளங்களை அமைக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பல ஆண்டுகளாக நிலவி வரும் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் ஒரு பகுதியில் பார்க்கிங் தளம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, உதகை கோட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் அரசு அதிகாரிகள் இன்று நிலத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். வரும் கோடை சீசனுக்குள் பார்க்கிங் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.