அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்கள் புறக்கணிப்பதைக் கண்டித்து மடத்துக்குளம் விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் : மடத்துக்குளத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்கள் பல்வேறு காரணங்களுக்காக புறக்கணிப்பதைக் கண்டித்து வட்டாச்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : மடத்துக்குளத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்கள் பல்வேறு காரணங்களுக்காக புறக்கணிப்பதைக் கண்டித்து வட்டாச்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே இருக்கும் கடத்தூா், கணியூா், சோழமாதேவி, கல்லாபுரம் ஆகிய பகுதியில் சுமார் 7,500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இங்கு நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. தற்போது, அறுவடை செய்யப்பட்டு நெல்லை விற்பனை செய்வதற்காக, கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்றால், கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா நில உரிமை சான்று போன்ற ஆவணங்கள் கேட்டு அலைக்கழிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது, வருவாய்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், எந்தவித சான்றுகளும் வாங்க முடியாமல் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், எந்தவித சான்றுகளும் இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை பெற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரி மடத்துக்குளம் வட்டாச்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.a

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...