நீலகிரி : நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் 26 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்டஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நீலகிரி : நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் 26 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்டஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு வசிக்கும் படுகர் இன மக்களால் ஸ்ரீ ஹெத்தையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுப்படுகிறது. இவ்விழா டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் பேரகணி கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இத்திருவிழாவில், படுகர் இனமக்கள் மட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் கலந்து கொள்வது வழக்கம். எனவே, இந்தத் திருவிழாவின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாகப் படுகர் இன மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹெத்தையம்மன் திருவிழா வரும் 26 -ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறைக்குப் பதிலாக அடுத்த மாதம் 5 -ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீலகிரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு வசிக்கும் படுகர் இன மக்களால் ஸ்ரீ ஹெத்தையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுப்படுகிறது. இவ்விழா டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் பேரகணி கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இத்திருவிழாவில், படுகர் இனமக்கள் மட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் கலந்து கொள்வது வழக்கம். எனவே, இந்தத் திருவிழாவின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாகப் படுகர் இன மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹெத்தையம்மன் திருவிழா வரும் 26 -ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறைக்குப் பதிலாக அடுத்த மாதம் 5 -ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீலகிரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.