சட்டவிரோதமாக பேனர் வைக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனம்

சென்னை : சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை : சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அரசியல் கட்சிகளின் சார்பில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதனால்,பல விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சட்டவிரோதமாக பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத பேனர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோதமாக பேனர் வைக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் கூறுகையில், "சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசியல் கட்சியில் போய் சேர்ந்து விடுங்கள். பேனர்கள் அகற்றப்பட்டது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அளித்த அறிக்கை திருப்தியில்லை. ஐந்து வருடங்களாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நீதிமன்றம் சோர்ந்துவிட்டது, இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...