திருப்பூர் : நில அபகரிப்பு வழக்கில் சாதகமாக செயல்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் உடுமலை காவல் ஆய்வாளருக்கு ஆண்டு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர் : நில அபகரிப்பு வழக்கில் சாதகமாக செயல்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் உடுமலை காவல் ஆய்வாளருக்கு 1 வருட சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர், தாராபுரம் அடுத்த ஊத்துப்பாளையம் பகுதி விவசாயி தங்கமுத்து. இவர் தன்னுடைய ரூ.25 லட்சம் மதிப்புள்ள 4.80 ஏக்கர் விவசாய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த விவசாயி சின்னசாமி அபகரித்து விட்டதாகவும், அதற்கு உதவி காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் உள்ளிட்ட 9 பேர் உதவி செய்ததாகவும் கூறி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2013 -ம் ஆண்டு தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த இவ்வழக்கு 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு உடுமலை காவல் ஆய்வாளர் சிவக்குமார் சாதகமாகச் செயல்பட்டதற்காக, அவருக்கு தாராபுரம் குற்றவியல் நீதிமன்றம் 1 வருட சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து, தங்கமுத்து கூறும்போது மற்ற 8 பேருக்கும் தண்டனை அறிவிக்க வேண்டும். மேலும், அபகரிக்கப்பட்ட நிலத்தை என்னிடமே ஒப்படைக்க வேண்டும் என மேல்முறையீடு செய்ய உள்ளேன் என தெரிவித்தார். இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஆய்வாளர் சிவக்குமாருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர், தாராபுரம் அடுத்த ஊத்துப்பாளையம் பகுதி விவசாயி தங்கமுத்து. இவர் தன்னுடைய ரூ.25 லட்சம் மதிப்புள்ள 4.80 ஏக்கர் விவசாய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த விவசாயி சின்னசாமி அபகரித்து விட்டதாகவும், அதற்கு உதவி காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் உள்ளிட்ட 9 பேர் உதவி செய்ததாகவும் கூறி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2013 -ம் ஆண்டு தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த இவ்வழக்கு 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு உடுமலை காவல் ஆய்வாளர் சிவக்குமார் சாதகமாகச் செயல்பட்டதற்காக, அவருக்கு தாராபுரம் குற்றவியல் நீதிமன்றம் 1 வருட சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து, தங்கமுத்து கூறும்போது மற்ற 8 பேருக்கும் தண்டனை அறிவிக்க வேண்டும். மேலும், அபகரிக்கப்பட்ட நிலத்தை என்னிடமே ஒப்படைக்க வேண்டும் என மேல்முறையீடு செய்ய உள்ளேன் என தெரிவித்தார். இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஆய்வாளர் சிவக்குமாருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.