கோவை : பணப்பலன்கள் வழங்குவதில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தீர்வு காண வலியுறுத்தி கோவை மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மனு அளித்தனர்.
கோவை : பணப்பலன்கள் வழங்குவதில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தீர்வு காண வலியுறுத்தி கோவை மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மனு அளித்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, கோவை மண்டலம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றவர்கள், இதில் கலந்துகொண்டு அரசு போக்குவரத்து கழகம் பொது மேலாளரிடம் தங்கள் மனுக்களை கொடுத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவதில் குளறுபடி, தேவையற்ற காலதாமதம், ஓய்வூதிய விதிகள் சட்ட விதிகளுக்குப் புறம்பான கணக்கீட்டு முறைகேடுகளில் இதர கழகங்களை விட அடித்தட்டில் இருக்கும் கோவை கோட்ட நிர்வாகம், இதனை சரி செய்ய வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது.

இதனிடையே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் திரண்டதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, கோவை மண்டலம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றவர்கள், இதில் கலந்துகொண்டு அரசு போக்குவரத்து கழகம் பொது மேலாளரிடம் தங்கள் மனுக்களை கொடுத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவதில் குளறுபடி, தேவையற்ற காலதாமதம், ஓய்வூதிய விதிகள் சட்ட விதிகளுக்குப் புறம்பான கணக்கீட்டு முறைகேடுகளில் இதர கழகங்களை விட அடித்தட்டில் இருக்கும் கோவை கோட்ட நிர்வாகம், இதனை சரி செய்ய வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது.

இதனிடையே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் திரண்டதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
