நீலகிரி : உதகை ரேடியோ வானியல் ஆராய்ச்சி மையத்தில் காந்தியடிகளின் 150 -வது நினைவு ஆண்டையொட்டி மாணவர்களுக்குத் தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகள் விளக்கப்பட்டது.
நீலகிரி : உதகை ரேடியோ வானியல் ஆராய்ச்சி மையத்தில் காந்தியடிகளின் 150 -வது நினைவு ஆண்டையொட்டி மாணவர்களுக்குத் தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகள் விளக்கப்பட்டது.

மகாத்மா காந்தியடிகளின் 150 -வது நினைவு ஆண்டை முன்னிட்டு அவர் சென்ற இடங்களில் பயிலும் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்டுப்பிப்புகளை ஊக்குவிக்கும் மத்திய அமைச்சகத்தின் கலாச்சார துறை மற்றும் ஜவர்ஹலால் நேரு நினைவு அருங்காட்சியகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, உதகையில் இயங்கி வரும் ரேடியோ வானியல் ஆராய்ச்சி மையம் சார்பில் உதகையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கும் வகையில் வானியல் நிகழ்வுகள் விளக்கப்பட்டன. இதில் நிலவில் உள்ள மலைகள் குறித்தும் நட்சத்திரங்கள் மற்றும் வானியல் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், அவர்கள் கண்ட காட்சியை ஓவியமாக வரைந்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும் போது வானில் உள்ள நிலா, நட்சத்திரம், சூரியன் ஆகியவற்றை வெறும் கண்களால் பார்க்கும் பொழுது ஒன்று தெரிவதில்லை. ஆனால், தொலைநோக்கியின் மூலம் அருகே காணும் போது அதன் தோற்றம் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
இது மேற்கொண்டு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது என்றனர்.