வைகுண்ட ஏகாதசி : காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கோவை : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் இன்று சொர்கவாசம் திறப்பு நிகழ்வு நடந்ததைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு ராபத்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


கோவை : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் இன்று சொர்கவாசம் திறப்பு நிகழ்வு நடந்ததைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு ராபத்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையில் புகழ் பெற்ற வைணவ திருத்தலமான அருள்மிகு அரங்கநாதப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 8 -ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. தினமும் காலை அரங்கநாத பெருமாள் முன்பு கோவில் ஸ்தலத்தார் மற்றும் பட்டர் சுவாமிகள் திருமாழி, திருப்பாவை வாசித்துச் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். 

இதையடுத்து, 10 -ம் நாளில் இரவு அரங்கநாதப் பெருமாள் மோகினி அவதாரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அரங்கநாதப் பெருமாள் ஷேச வாகனத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தர். 



முன்னதாக ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோருக்கு பரமபதவாசல் வழியே காட்சி அளித்தார். பிற்பாடு பரமபத வாசல் வழியே அரங்கநாதரைத் தரிசனம் செய்ய இரவு முதலே காத்திருந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து இன்று முதல் 10 நாட்களுக்கு ராபத்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...