கோவை : கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள கிக்கானி ரயில்வே மேம்பாலப்பணிகள் துரிதமாக முடிவடைந்ததையொட்டி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை மீண்டும் திறக்கப்பட்டது.
கோவை : கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள கிக்கானி ரயில்வே மேம்பாலப்பணிகள் துரிதமாக முடிவடைந்ததையொட்டி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை மீண்டும் திறக்கப்பட்டது.
கோவை புரூக்பாண்ட் சாலையில் இருந்து காந்திபுரம் செல்ல பயன்படுத்தும் முக்கிய பாதையாக கிக்கானி ரயில்வே பால வழி உள்ளது. இந்த ரயில்வே பாலத்தின் வழியில் மழை நேரங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த சாலையை கடக்க பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோல, இந்த பாலத்தின் கீழ் இருக்கும் நீரை உறிஞ்சி மட்டுமே எடுக்கக்கூடிய நிலை இருந்தது. இதனால், மழை நேரங்களில் இந்தப் பகுதியை கடப்பவர்கள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் கூட ரயில்வே பாலத்தின் மேல் ஏறி செல்கின்றனர். இது ஆபத்தான பயணம் என பலமுறை அறிவிக்கப்பட்டும் பொதுமக்கள் வேறுவழியின்றி சென்று வந்தனர்.

இதையடுத்து, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஒரு வாரத்திற்கு முன் மழைநீர் தேங்காதவாறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று மாலை பணிகள் அனைத்தும் முடிவுற்று இந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சாலை திறக்கப்பட்டது. தற்போது, வழக்கம்போல பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்
கோவை புரூக்பாண்ட் சாலையில் இருந்து காந்திபுரம் செல்ல பயன்படுத்தும் முக்கிய பாதையாக கிக்கானி ரயில்வே பால வழி உள்ளது. இந்த ரயில்வே பாலத்தின் வழியில் மழை நேரங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த சாலையை கடக்க பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோல, இந்த பாலத்தின் கீழ் இருக்கும் நீரை உறிஞ்சி மட்டுமே எடுக்கக்கூடிய நிலை இருந்தது. இதனால், மழை நேரங்களில் இந்தப் பகுதியை கடப்பவர்கள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் கூட ரயில்வே பாலத்தின் மேல் ஏறி செல்கின்றனர். இது ஆபத்தான பயணம் என பலமுறை அறிவிக்கப்பட்டும் பொதுமக்கள் வேறுவழியின்றி சென்று வந்தனர்.

இதையடுத்து, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஒரு வாரத்திற்கு முன் மழைநீர் தேங்காதவாறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று மாலை பணிகள் அனைத்தும் முடிவுற்று இந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சாலை திறக்கப்பட்டது. தற்போது, வழக்கம்போல பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்