உதகையில் காட்டெருமை தாக்கியதில் கூலி தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி : உதகை டென்மேரி அருகே காட்டெருமை தாக்கியதில் பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : உதகை டென்மேரி அருகே காட்டெருமை தாக்கியதில் பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.மாவட்டத்தில் அவ்வப்போது யானை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதும், மனிதர்களை தாக்குவதும், மனித உயிர்கள் பலியாகுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கேசவன் (75) என்பவர் உதகை டென்மேரி பகுதியில் கற்பூர தைலம் தயாரிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இன்று வழக்கம் போல, கற்பூர தைலம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த காட்டு மாடு ஒன்று திடீரென்று அவரை தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இதனைத்தொடர்ந்து, வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவரது உடல் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...