கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 425 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவை வைசியால் வீதி அருகே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், 425 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை : கோவை வைசியால் வீதி அருகே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், 425 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பான்மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக, பான் மசாலா, குட்கா பொருட்களை முழுவதும் அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். 



இந்த நிலையில், இன்று உணவு பாதுகாப்புத்துறையினர் டவுன்ஹால் அருகே உள்ள வைசியால் வீதி, பஜனை கோவில் வீதி போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். இந்த திடீர் ஆய்வில், வைசியால் வீதி அருகே உள்ள பட்டக்கார அய்யாசாமி தெருவில் மகேஸ்வரன் என்பவருடைய குடோனில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவுப் புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சுமார் 225 கிலோ அளவுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.



அதேபோல, வைசியால் வீதியில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் குடோன்களில் நடத்திய ஆய்வில், மேலும் 200 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தத் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர்களிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...