திருப்பூர் : பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இரண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடுமலை கவுசல்யா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
திருப்பூர் : பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இரண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடுமலை கவுசல்யா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
திண்டிவனத்தை சேர்ந்த சந்தோஷ் ஶ்ரீ என்ற பெண்மணி தனது கணவருடன் ஏற்பட்ட மனமுறிவின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை கொமரலிங்கம் பகுதியில் அமைந்துள்ள சங்கர் சமூக நீதி அறக்கட்டளையில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனையடுத்து, சந்தோஷ்ஶ்ரீ-க்கு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் விவரங்களை திண்டிவனம் மற்றும் சென்னை தாம்பரம் காவல்நிலையங்களில் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி அன்று இரவு 9 மணியளவில் சங்கர் சமூகநீதி அறக்கட்டளைக்கு வந்த போலீசார், அங்கிருந்த சங்கரின் சகோதரர் யுவராஜை தாக்கியதுடன், சந்தோஷ்ஶ்ரீயை ஆண் போலீசார் இருவரும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. எனவே, யுவராஜை தாக்கிய மற்றும் சந்தோஷ்ஸ்ரீயை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ஆண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை கவுசல்யா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

திண்டிவனத்தை சேர்ந்த சந்தோஷ் ஶ்ரீ என்ற பெண்மணி தனது கணவருடன் ஏற்பட்ட மனமுறிவின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை கொமரலிங்கம் பகுதியில் அமைந்துள்ள சங்கர் சமூக நீதி அறக்கட்டளையில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனையடுத்து, சந்தோஷ்ஶ்ரீ-க்கு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் விவரங்களை திண்டிவனம் மற்றும் சென்னை தாம்பரம் காவல்நிலையங்களில் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி அன்று இரவு 9 மணியளவில் சங்கர் சமூகநீதி அறக்கட்டளைக்கு வந்த போலீசார், அங்கிருந்த சங்கரின் சகோதரர் யுவராஜை தாக்கியதுடன், சந்தோஷ்ஶ்ரீயை ஆண் போலீசார் இருவரும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. எனவே, யுவராஜை தாக்கிய மற்றும் சந்தோஷ்ஸ்ரீயை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ஆண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை கவுசல்யா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
