நீலகிரி : குன்னூர் அருகே தூதூர் மட்டம் கொலக்கம்பை பகுதிகளில் குட்டியுடன் சுற்றத் திரியும் 5 யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
நீலகிரி : குன்னூர் அருகே தூதூர் மட்டம் கொலக்கம்பை பகுதிகளில் குட்டியுடன் சுற்றத் திரியும் 5 யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
குன்னுார் அருகே தூதூர் மட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதேபோன்று, இந்த யானைகள் மானார், கொலக்கம்பை, தூதூர் மட்டம் பகுதிக்கு வந்து அங்குள்ள மேரக்காய் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை அவ்வப்போது சேதம் செய்து வருகின்றன. தொடர்ந்து, பணப்பாறை, துண்டநேரி உட்பட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்த 2 ஏக்கருக்கும் மேல் இருந்த மேரக்காய் செடிகளை நாசம் செய்தன.
பின்பு அங்கிருந்த தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள இந்த யானைகள் கூட்டம், காட்டெருமைகளின் நடமாட்டத்தால் கூட்டங்கரைப் பகுதிக்குள் வந்து விடுகின்றன. இதனைத் தொடர்ந்து, குந்தா மற்றும் குன்னூர் வனவர்கள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து யானைகளைக் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "இந்த யானைகளை நெடுகல்கொம்பை வழியாக முள்ளி வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும், யானைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால், ஆய்வு செய்து அதற்கான நிவாரணம் வழங்கப்படும்," என்றனர்.
குன்னுார் அருகே தூதூர் மட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதேபோன்று, இந்த யானைகள் மானார், கொலக்கம்பை, தூதூர் மட்டம் பகுதிக்கு வந்து அங்குள்ள மேரக்காய் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை அவ்வப்போது சேதம் செய்து வருகின்றன. தொடர்ந்து, பணப்பாறை, துண்டநேரி உட்பட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்த 2 ஏக்கருக்கும் மேல் இருந்த மேரக்காய் செடிகளை நாசம் செய்தன.
பின்பு அங்கிருந்த தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள இந்த யானைகள் கூட்டம், காட்டெருமைகளின் நடமாட்டத்தால் கூட்டங்கரைப் பகுதிக்குள் வந்து விடுகின்றன. இதனைத் தொடர்ந்து, குந்தா மற்றும் குன்னூர் வனவர்கள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து யானைகளைக் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "இந்த யானைகளை நெடுகல்கொம்பை வழியாக முள்ளி வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும், யானைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால், ஆய்வு செய்து அதற்கான நிவாரணம் வழங்கப்படும்," என்றனர்.