கோவை : கொங்கு மண்டல விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில் விவசாயிகள், கரூர் - கோவை இடையே புதிதாக 6 வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : கொங்கு மண்டல விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில் விவசாயிகள், கரூர் - கோவை இடையே புதிதாக 6 வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது :- கரூர் - கோவை இடையிலான சாலை திட்டத்திற்கு விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால், சுமார் 3,000 ஏக்கர் விவசாயம் நிலம் பாதிக்கப்படும். இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக ஏற்கனவே உள்ள கரூர் - கோவை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

பெரு நிறுவனங்களுக்காக இச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சிக்கிறது. இத்திட்டத்தை கைவிடவில்லை எனில் போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றனர். இந்த மனு அளிக்கும் போது, சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது :- கரூர் - கோவை இடையிலான சாலை திட்டத்திற்கு விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால், சுமார் 3,000 ஏக்கர் விவசாயம் நிலம் பாதிக்கப்படும். இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக ஏற்கனவே உள்ள கரூர் - கோவை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

பெரு நிறுவனங்களுக்காக இச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சிக்கிறது. இத்திட்டத்தை கைவிடவில்லை எனில் போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றனர். இந்த மனு அளிக்கும் போது, சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.