கோவை : எல் அண்ட் டி பைபாஸ் அருகே பாலக்காடு நோக்கி லாரி ஓட்டிச் சென்ற இரும்பு வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : எல் அண்ட் டி பைபாஸ் அருகே பாலக்காடு நோக்கி லாரி ஓட்டிச் சென்ற இரும்பு வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது குட்டியின் மகன் அப்துல் சலாம் (44). இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் மினிலாரி மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு இரும்புகளை எடுத்துச் சென்று மொத்த விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல, இவர் நேற்று கேரளாவில் இருந்து இரும்பு ஸ்கிராப்களை எடுத்துக் சென்று பெங்களூரில் இறக்கி வைத்திருக்கிறார்.
இதையடுத்து, அங்கிருந்து மீண்டும் கோவை வழியாக பாலக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் எல் என் டி பைபாஸ் அருகே வந்த அப்துல் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென வந்த ஒரு மர்ம கும்பல் அப்துல் சலாமிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. மேலும், அந்த கும்பல் அவரின் கையிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தைப் பறித்து சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து அப்துல் சலாம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின்பேரில் போத்தனூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது குட்டியின் மகன் அப்துல் சலாம் (44). இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் மினிலாரி மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு இரும்புகளை எடுத்துச் சென்று மொத்த விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல, இவர் நேற்று கேரளாவில் இருந்து இரும்பு ஸ்கிராப்களை எடுத்துக் சென்று பெங்களூரில் இறக்கி வைத்திருக்கிறார்.
இதையடுத்து, அங்கிருந்து மீண்டும் கோவை வழியாக பாலக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் எல் என் டி பைபாஸ் அருகே வந்த அப்துல் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென வந்த ஒரு மர்ம கும்பல் அப்துல் சலாமிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. மேலும், அந்த கும்பல் அவரின் கையிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தைப் பறித்து சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து அப்துல் சலாம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின்பேரில் போத்தனூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.