திருப்பூரில் குடிநீர் வராததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

திருப்பூர் : திருப்பூரில் இரண்டு வாரங்களாக குடிநீர் வராததைக் கண்டித்து காலிக்குடங்களைக் கையில் ஏந்தியபடி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் இரண்டு வாரங்களாக குடிநீர் வராததைக் கண்டித்து காலிக்குடங்களைக் கையில் ஏந்தியபடி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 24 -வது வார்டு பகுதியில் முத்துநகர் , அப்புச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன . இங்கு வாரம் ஒருமுறை மாநகராட்சி சார்பில் குடிநீர் சப்ளை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது . 



இந்நிலையில், இந்த முறை15 தினங்கள் ஆகியும் இன்னும் குடிநீர் சப்ளை செய்யப்படாமல் இருப்பதால் குடிப்பதற்கான நீரை பணம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் பலர் காலிக்குடங்களுடன் திருப்பூர் கொங்குமெயின் சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 



இதையடுத்து, தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...