திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக திறப்புவிழாவிற்கு அமைச்சர்கள் வருகை தந்ததால், 15 வருடமாகச் சாலையோரம் வசித்து வந்த மக்களை மாநகராட்சி நிர்வாகம் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக திறப்புவிழாவிற்கு அமைச்சர்கள் வருகை தந்ததால், 15 வருடமாகச் சாலையோரம் வசித்து வந்த மக்களை மாநகராட்சி நிர்வாகம் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் அருகே உள்ள நொய்யல் கரையோரம் 50 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பெனாயில் தயாரித்து விற்றல், கூடை பின்னுதல் உள்ளிட்ட குடிசைத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்கள் அப்பகுதியில் 15 ஆண்டுகளாகச் சிறிய அளவிலான குடில் அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுடைய குழந்தைகளும் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பே அவர்களுக்கு இடம் ஒதுக்குவதாக உத்தரவாதம் அளித்த மாநகராட்சி நிர்வாகம் இன்னும் இடம் கொடுக்காததால் சாலையோரத்திலேயே வசித்து வந்தனர். இதற்கிடையில், அதே சாலையில் அதிமுக பிரமுகரின் விடுதி திறப்பு விழாவிற்காக நாளை அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் வருகை தரவுள்ளதால் சாலையோர மக்களைக் காவல்துறையினர் உதவியோடு, இன்று அவசர அவசரமாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து, இன்று மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்காகத் தனி இடம் ஒதுக்கியது. அந்த இடத்திற்குச் சென்ற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாததால், மீண்டும் அதே பகுதிக்கு வந்து சாலையோரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "இத்தனை நாட்கள் எங்களை காலிசெய்ய சொல்லாத மாநகராட்சி நிர்வாகம் நாளை அமைச்சர் வருகை என்பதால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்திற்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விடுகிறது. உரியப் பாதுகாப்பும் அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் எங்களின் பகுதியில் உள்ள 35 குடும்பத்தினரும் குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்வோம்," என தெரிவித்தனர்.
திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் அருகே உள்ள நொய்யல் கரையோரம் 50 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பெனாயில் தயாரித்து விற்றல், கூடை பின்னுதல் உள்ளிட்ட குடிசைத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்கள் அப்பகுதியில் 15 ஆண்டுகளாகச் சிறிய அளவிலான குடில் அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுடைய குழந்தைகளும் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பே அவர்களுக்கு இடம் ஒதுக்குவதாக உத்தரவாதம் அளித்த மாநகராட்சி நிர்வாகம் இன்னும் இடம் கொடுக்காததால் சாலையோரத்திலேயே வசித்து வந்தனர். இதற்கிடையில், அதே சாலையில் அதிமுக பிரமுகரின் விடுதி திறப்பு விழாவிற்காக நாளை அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் வருகை தரவுள்ளதால் சாலையோர மக்களைக் காவல்துறையினர் உதவியோடு, இன்று அவசர அவசரமாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து, இன்று மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்காகத் தனி இடம் ஒதுக்கியது. அந்த இடத்திற்குச் சென்ற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாததால், மீண்டும் அதே பகுதிக்கு வந்து சாலையோரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "இத்தனை நாட்கள் எங்களை காலிசெய்ய சொல்லாத மாநகராட்சி நிர்வாகம் நாளை அமைச்சர் வருகை என்பதால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்திற்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விடுகிறது. உரியப் பாதுகாப்பும் அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் எங்களின் பகுதியில் உள்ள 35 குடும்பத்தினரும் குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்வோம்," என தெரிவித்தனர்.