திருப்பூர் : திருப்பூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் உற்சவர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் உற்சவர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாமளாபுரம் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல, பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், இன்று கோவிலை திறக்க சென்ற போது கோவிலின் கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், உள்ளே சென்று பார்த்த போது, உள்ளிருந்த ஐம்பொன் உற்சவர் பெருமாள் சிலை மற்றும் ருக்மணி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து திகைத்துப் போனார். பின்னர், இது குறித்து மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் பெருமாள் மற்றும் ருக்மணி உற்சவர் சிலைகள் மற்றும் அரை பவுன் தாலி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாமளாபுரம் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல, பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், இன்று கோவிலை திறக்க சென்ற போது கோவிலின் கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், உள்ளே சென்று பார்த்த போது, உள்ளிருந்த ஐம்பொன் உற்சவர் பெருமாள் சிலை மற்றும் ருக்மணி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து திகைத்துப் போனார். பின்னர், இது குறித்து மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் பெருமாள் மற்றும் ருக்மணி உற்சவர் சிலைகள் மற்றும் அரை பவுன் தாலி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
