கோவை : கோவை அரசு மருத்துவமனையில், கடந்த 24 மணிநேரத்தில் பன்றிக்காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில், கடந்த 24 மணிநேரத்தில் பன்றிக்காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நிலவி வரும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, பெரும்பாலானோர் கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24-ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கந்தசாமி என்பவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கந்தசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல, கோவை, சூலூர் அப்பநாயக்கம்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி (50) கடந்த 9-ம் தேதி பன்றிக் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதேபோல, சூலூர் முத்துகவுண்டன் புதூரைச் சேர்ந்த முருகதாஸின் மனைவி மணியம்மாள் (38). இவர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 2-ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக 23 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 4 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 63 பேரும் என மொத்தம் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நிலவி வரும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, பெரும்பாலானோர் கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24-ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கந்தசாமி என்பவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கந்தசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல, கோவை, சூலூர் அப்பநாயக்கம்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி (50) கடந்த 9-ம் தேதி பன்றிக் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதேபோல, சூலூர் முத்துகவுண்டன் புதூரைச் சேர்ந்த முருகதாஸின் மனைவி மணியம்மாள் (38). இவர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 2-ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக 23 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 4 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 63 பேரும் என மொத்தம் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.