கோவை : கோவையில் பருத்தி வாங்கிப் பல கோடிகளை மோசடி செய்த தொழிலதிபர் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கோவை : கோவையில் பருத்தி வாங்கிப் பல கோடிகளை மோசடி செய்த தொழிலதிபர் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45). பருத்தி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். உடுமலைப்பேட்டை அருகே உள்ள இலுவன் புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஷேக் அப்துல் காதர் (38). இவர் சீனிவாசனிடம் பருத்தி வாங்கி ரூ.2 கோடி வரைப் பாக்கி வைத்துள்ளார். இந்தத் தொகையை கேட்ட போது புதிதாக மில் வாங்குவதாகவும், வாங்கியதும் பணத்தை மொத்தமாகக் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பி மேலும் ரூ.1.25 கோடி சீனிவாசன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சீனிவாசன் தன்னுடைய பணம் ரூ.3.25 கோடி ரூபாயை ஷேக் அப்துல் காதரிடம் திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது காதர் பணத்தை திருப்பித் தராமல் இருந்திருக்கிறார். இதனால் பணத்தை தராமல் மோசடி செய்துள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை குற்றப்பிரிவு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார்.
காவல்துறை உதவி ஆணையர் சந்திரசேகர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, காதரை கண்டுபிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதலில், கோவை டி.வி.எஸ் நகர் பகுதியில் ஷேக் அப்துல் காதர் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45). பருத்தி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். உடுமலைப்பேட்டை அருகே உள்ள இலுவன் புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஷேக் அப்துல் காதர் (38). இவர் சீனிவாசனிடம் பருத்தி வாங்கி ரூ.2 கோடி வரைப் பாக்கி வைத்துள்ளார். இந்தத் தொகையை கேட்ட போது புதிதாக மில் வாங்குவதாகவும், வாங்கியதும் பணத்தை மொத்தமாகக் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பி மேலும் ரூ.1.25 கோடி சீனிவாசன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சீனிவாசன் தன்னுடைய பணம் ரூ.3.25 கோடி ரூபாயை ஷேக் அப்துல் காதரிடம் திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது காதர் பணத்தை திருப்பித் தராமல் இருந்திருக்கிறார். இதனால் பணத்தை தராமல் மோசடி செய்துள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை குற்றப்பிரிவு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார்.
காவல்துறை உதவி ஆணையர் சந்திரசேகர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, காதரை கண்டுபிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதலில், கோவை டி.வி.எஸ் நகர் பகுதியில் ஷேக் அப்துல் காதர் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.