கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வேளாண் வானிலை ஆராய்ச்சித் துறைத் தலைவர் பன்னீர் செல்வம் தகவல் அளித்துள்ளார்.
கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வேளாண் வானிலை ஆராய்ச்சித் துறைத் தலைவர் பன்னீர் செல்வம் தகவல் அளித்துள்ளார்.
இது குறித்து பன்னீர் செல்வம் கூறுகையில், " கோவையை சுற்றியுள்ளப் பகுதிகளில் இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுவதோடு மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இந்நாட்களில், வெப்பநிலையின் அளவு பகலில் 29 டிகிரி செல்சியஸாகவும், இரவில் 22 டிகிரி செல்சியஸாகவும் காணப்படலாம். காற்றின் வேகம் 5 கி.மீ/மணி முதல் 6 கி.மீ/மணி இருக்கும்.

மேலும், பொதுவாகக் கோவையில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 328 மி.மீ அளவு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த வருடம் 368 மி.மீ அளவு மழை எதிர்பார்க்கப்பட்டது. அதில், அக்டோபர் மாதம் எதிர்பார்த்த 146 மி,மீ அளவை விட கூடுதலாக 151 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. ஆனால், நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த 111 மி.மீ அளவைவிட குறைவாக 57 மி.மீ அளவுதான் மழை பதிவாகியுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் டிசம்பர் 5-க்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்போது இருப்பது போலவே, நீலகிரியில் இன்னும் இரண்டு நாட்கள் மேகமூட்டமாகக் காணப்படும்," என்றார்.