கோவை: கோவையில் சொந்த வாகனங்களை டூரிஸ்ட் வாகனங்களாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் 5 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் சொந்த வாகனங்களை டூரிஸ்ட் வாகனங்களாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் 5 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை, கொடிசியா மைதானத்தில் மருத்துவர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்கு வந்திருக்கும் மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு பகுதியில் இருந்து 900- க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் பலர் சொந்த கார்களை, டூரிஸ்ட் கார்களாக பயன்படுத்தி வருகிறார்கள் என டாக்ஸி ஒட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்திந்திய டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில், வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்யப் புகார் அளிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 300-க்கும் மேற்பட்ட சொந்த வாகனங்கள், டூரிஸ்ட் வாகனங்களாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, அப்பகுதியில் உடனடியாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் 5 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் .
மேலும், டூரிஸ்ட் ஓட்டுநர்கள் கூறுகையில், "நாங்கள் டூரிஸ்ட் வாகனங்களுக்கு என்று தனியாக வரி செலுத்தி வரும் நிலையில், இது போன்றச் செயல்களால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது" என்றனர்.
கோவை, கொடிசியா மைதானத்தில் மருத்துவர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்கு வந்திருக்கும் மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு பகுதியில் இருந்து 900- க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் பலர் சொந்த கார்களை, டூரிஸ்ட் கார்களாக பயன்படுத்தி வருகிறார்கள் என டாக்ஸி ஒட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்திந்திய டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில், வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்யப் புகார் அளிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 300-க்கும் மேற்பட்ட சொந்த வாகனங்கள், டூரிஸ்ட் வாகனங்களாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, அப்பகுதியில் உடனடியாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் 5 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் .
மேலும், டூரிஸ்ட் ஓட்டுநர்கள் கூறுகையில், "நாங்கள் டூரிஸ்ட் வாகனங்களுக்கு என்று தனியாக வரி செலுத்தி வரும் நிலையில், இது போன்றச் செயல்களால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது" என்றனர்.