ஓவியக் கலையில் 'ஃபையர் பெயிண்டிங்' : புதுமையைப் புகுத்திய கோவையைச் சேர்ந்த இளைஞர்

கோவை : படைப்புகளுக்கு பஞ்சமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஓவியக் கலையில் ஃபையர் பெயிண்டிங்கை புகுத்தி அசத்தியுள்ளார்.


கோவை : படைப்புகளுக்கு பஞ்சமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஓவியக் கலையில் ஃபையர் பெயிண்டிங்கை புகுத்தி அசத்தியுள்ளார். 

ஜி.ஆர்.டி. கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் துறையின் இணை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் டி. வசந்தகுமார். 24 வயதான இவர் சிறந்த ஓவியராகவும் வலம் வருகிறார். ஓவியத் துறையில் கொண்டுள்ள ஆர்வத்தால், விநோத படைப்பை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையாலும் பொதுமக்களை தன்பக்கம் திருப்பியுள்ளார். அதாவது, பட்டாசு மருந்துகள் மற்றும் கற்பூரத் துகள்களைக் கொண்டு நெருப்புடன் கூடிய ஓவியங்களை வரைந்து, அசத்தி வருகிறார். இது போன்ற ஓவியங்களை அசாத்தியமான மூலக்கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் அவர் கூறியதாவது :- அடர்த்தியான காகிதத்தில் ஸ்கெட்சு பென்சில்களைக் கொண்டு படம் வரைந்து, அதற்கு பட்டாசு மருந்துகள் மற்றும் கற்பூரத் துகள்களைப் பயன்படுத்தி வர்ணம் தீட்டுவேன். பின்னர், அதில், நெருப்பினை பற்ற வைத்து, 'ஃபையர் பெயிண்டிங்' உருவாக்குகிறேன். 

கல்லூரியில் நான் பயிலும் காலங்களில் நான் பயன்படுத்திய தொழில்நுட்பங்களையே முதலில் பயன்படுத்தி வந்தேன். ஆனால், எனது ஆர்வ மிகுதியால், பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 'ஃபையர் பெயிண்டிங்' உருவாக்கினேன். இதற்காக நெருப்புடன் நான் நேரம் செலவிடுவதைக் கண்டு எனது பெற்றோர்கள் பயப்பட்டனர். நான் எனது ஆசிரியர்கள் ரவிராஜ், முருகேஷ் ஆகியோரால் ஈர்க்கப்பட்டேன். ஏனெனில், எனது யோசனைகளுக்கு அவர்கள் மதிப்பளித்தனர். தீயினைப் பயன்படுத்துவதால் பொருட்கள் எரிந்து நாசமாவதுதான் இயல்பு. ஆனால், எனது படைப்பில் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏனென்றால், பென்சிலில் வரைந்து, அதன் வெளிப்புறங்களில் பசையினைப் பயன்படுத்தி உலர வைப்பதுதான் காரணம், இவ்வாறு அவர் கூறினார். 



ஓவியர் வசந்தகுமாரின் 'ஃபையர் பெயிண்டிங்' படைப்பு அண்மையில் கோவை ஜென்னி கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இவரது விநோதமான இந்த பெயிண்டிங் விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...