காட்டு யானை 'விநாயகனை' அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் : கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் காட்டு யானை விநாயகனை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் காட்டு யானை விநாயகனை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தடாகம் பகுதியில் விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் காட்டு யானை 'விநாயகனை' அப்புறப்படுத்துமாறு வெகுநாட்களாகவே விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளவில்லை. 



இதையடுத்து, இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் காட்டு யானையை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமெனக் கோரி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், வனத்துறை அதிகாரிகள் எங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் மந்தமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, காட்டு யானையை அப்புறப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை வனத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 



மேலும், விவசாயப்பயிர்களை பாதிக்கும் வெள்ளை ஈ தாக்குதல், விவசாயிகளுக்கான வங்கி கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...