திருப்பூர் : திருப்பூரில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியருக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
திருப்பூர் : திருப்பூரில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியருக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் முன்னாள் வீட்டு பிளானிங் திட்ட உதவி பொறியளார் (2012) ராமலிங்கம். இவரிடம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஐந்து வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் கேட்டதற்கு, ராமலிங்கம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, ஒப்புதல் பெறுவதற்காக லோகநாதன் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று ராமலிங்கத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ராமலிங்கத்தை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட உதவி என்ஜினீயர் ராமலிங்கத்திற்கு 7-வது பிரிவு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டு தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், ஊழல் தடுப்பு சட்டம் 13/ 2 சட்டத்தின் கீழ் 5 வருடத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
பின்னர், ராமலிங்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.