கோவை: உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கோவை மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ அறிவுறுத்தினார்.
கோவை: உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கோவை மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ அறிவுறுத்தினார்.
உடல் உறுப்பு தானம் அளிப்பதன் மூலம் பிறரின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்ய முடியும். ஆனால், இன்று அது குறித்த தவறான கருத்து பரிமாற்றமும், தேவையில்லாத பயமும் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது.இது குறித்து கோவை அரசு மருத்துவமனை, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாக உடல் உறுப்பு தானத்தில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கு காரணம் மக்களிடம் உள்ள விழிப்புணர்தான். அனைத்துத் தரப்பினரும் உடல் உறுப்புதானம் செய்ய முன் வரவேண்டும். தமிழகத்தைப் போல பிற மாநிலங்களிலும் உடல் உறுப்பு தானம் நடக்கிறது. ஆனால், அவர்களிடம் விழிப்புணர்வு குறைவு. தமிழகத்தில் உடல் உறுப்புதானத்தில் எவ்வித ஊழலும் நடக்கவில்லை.
எனவே, உடல் உறுப்புதானம் குறித்த தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.இதைத் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும்", என்றார்.