தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. அதன்படி, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை 2 நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (நவ.28) நடைபெற்று வரும் நிலையில், ஆய்வுக்குழு இன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு வாய்ப்பு தரப்படாமல் ஆலை மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டு, ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. இந்த நிலையில், இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. அதன்படி, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை 2 நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (நவ.28) நடைபெற்று வரும் நிலையில், ஆய்வுக்குழு இன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு வாய்ப்பு தரப்படாமல் ஆலை மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டு, ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. இந்த நிலையில், இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.