கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், இந்திய பண்ணைத்திட்ட ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான 3 நாள் அங்கக வேளாண்மை கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியது.
கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், இந்திய பண்ணைத்திட்ட ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான 3 நாள் அங்கக வேளாண்மை கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் உத்தரபிரதேச மாநில மோடிபுரத்தைச் சேர்ந்த இந்திய பண்ணைத்திட்ட ஆராய்ச்சி மையமும் இணைந்து தேசிய அளவிலான அங்கக வேளாண்மை கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 3 நாட்கள் நடக்கும் இந்தக் கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியது.

தொடக்க நிகழ்வில், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தைச் சேர்ந்த எம்.பி. சிங், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார், ஆராய்ச்சி இயக்குநர் ராமராஜ், பயிர் மேலாண்மை இயக்குநர் சி. ஜெயந்தி, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் உதவி பொது இயக்குநர் எஸ்.பாஸ்கர், அங்கக வேளாண்மை துறைத் தலைவர் இ.சோமசுந்தரம், எஸ்.ரவிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அங்கக வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அரசின் மானிய திட்டங்கள் குறித்து கலந்தாய்வில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார் பேசுகையில், "கஜா புயலால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சாதனங்களின் உதவியோடு விவசாயப் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அளவிட்டு வருகிறோம். இதுகுறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதனை அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம்," என்றார்.

மேலும், தாவரங்களைத் தாக்கும் வெள்ளை ஈ பாதிப்பு குறித்து பேசிய அவர், விவசாயிகளின் எதிரிகளான வெள்ளை ஈ-க்களை உணவாக உட்கொள்ளும் ஒட்டுண்ணிகள் வளர்ப்பை ஊக்குவித்து, இரசாயன மருந்தின் பயன்பாட்டை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.