கோவை : கணபதி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆகியோர் இணைந்து தெருநாய்களிடம் சிக்கிய பெண் மயிலை சிகிச்சைக்காக மிருகசாலையில் ஒப்படைத்தனர்.
கோவை : கணபதி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆகியோர் இணைந்து தெருநாய்களிடம் சிக்கிய பெண் மயிலை சிகிச்சைக்காக மிருகசாலையில் ஒப்படைத்தனர்.
நான்கு வயதுடைய பெண் மயிலை தெருநாய்கள் விரட்டி கொடூரமாக தாக்கியுள்ளன. அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அகிலா, அதே குடியிருப்பில் வசிக்கும் இயற்கை ஆர்வலர் சையத்திடம் தெரிவித்துள்ளார். இயற்கை ஆர்வலர் சையத், மயிலுக்கு முதலுதவி செய்வதற்காக வன அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த வன அதிகாரிகள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மயிலை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மிருகசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சையத் கூறுகையில், "பொதுமக்கள் காயமடைந்த மயிலைக் கண்டதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமளவு விழிப்புணர்வுடன் இருப்பது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டத்தக்கது," என்றார்.
மேலும், நாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மயிலால் பறக்க முடியவில்லை என்கின்றனர், கணபதி குடியிருப்பாளர்கள்.
நான்கு வயதுடைய பெண் மயிலை தெருநாய்கள் விரட்டி கொடூரமாக தாக்கியுள்ளன. அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அகிலா, அதே குடியிருப்பில் வசிக்கும் இயற்கை ஆர்வலர் சையத்திடம் தெரிவித்துள்ளார். இயற்கை ஆர்வலர் சையத், மயிலுக்கு முதலுதவி செய்வதற்காக வன அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த வன அதிகாரிகள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மயிலை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மிருகசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சையத் கூறுகையில், "பொதுமக்கள் காயமடைந்த மயிலைக் கண்டதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமளவு விழிப்புணர்வுடன் இருப்பது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டத்தக்கது," என்றார்.
மேலும், நாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மயிலால் பறக்க முடியவில்லை என்கின்றனர், கணபதி குடியிருப்பாளர்கள்.