கஜா புயலில் கம்பீரமாக நின்ற பனைமரங்கள் !

கோவை: வீடுகளின் கூரைகள், உயர்ந்த கோபுரங்கள், மின்கம்பங்கள் என ஏராளமானவை கஜா புயலின் வேகத்தைத் தாங்கி கொள்ளாமல் சேதமடைந்த நிலையில் பனைமரங்கள் கம்பீரமாக நின்றுள்ளன.

கோவை: வீடுகளின் கூரைகள், உயர்ந்த கோபுரங்கள், மின்கம்பங்கள் என ஏராளமானவை கஜா புயலின் வேகத்தைத் தாங்கி கொள்ளாமல் சேதமடைந்த நிலையில் பனைமரங்கள் கம்பீரமாக நின்றுள்ளன.

தமிழகத்தின் மாநில மரமான பனைமரம் நீண்ட காலம் வரையிலும் பலனளிக்க வல்லது. அதனால் பனையை கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகத்தருவுக்கு ஒப்பாக மக்கள் கருதுகின்றனர். அந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த பனைமரம், கஜா புயலில் குறைந்தளவு சேதாரம் அடைந்தது ஆட்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னை மரங்களே வீழ்ந்த நிலையில் பனைமரங்கள் வலிமையாக நிற்க அதன் வடிவமைப்பு தான் காரணமாகும். பனையின் உச்சிப்பகுதியில் இருக்கும் மடிந்த இலைகள் முதல் மண்ணுக்கடியில் உள்ள வேர்த் தொகுதிகள் வரை எல்லாமும் இணைந்து தான் புயலில் இருந்து பனை மரங்களைக் காப்பாற்றியுள்ளது.

பனை மரங்கள் நீண்டகால பயிர். நிலத்தடி நீரைச் சேமிக்கும் திறன் அதிகம் கொண்டவை. எனவே, அதன் அமைப்பு பூமியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு வேர்த்தொகுதிகளை உடையது. பனையின் வேர்கள் குறைந்தது 5 முதல் 10 அடி வரை மண்ணுள் செல்லும் குழாய் வடிவமைப்பைக் கொண்டவை. நன்றாக மண்ணில் ஊடுருவிய பனை வேர்களின் பிணைப்பு தன்மையால், அதனை எளிதில் பிடுங்க முடியாது. 

மேலும், அதன் தண்டுகளின் நாள அமைப்பு மென்மையானவை. எனவே, அவற்றால் காற்றிற்கு ஏற்றவாறு வளைய முடியும். அதன் உச்சியில் இருக்கும் மடிந்த இலையமைப்பு காற்றினை உட்செலுத்த விடாது. 

ஆனால், தென்னை மரங்களில் இடைவெளியுடன் இருக்கும் இலைகள் காற்றின் வேகத்தினை ஈடு செய்ய திணறிப் போகும். இதனால் தான் கஜா புயலில் தென்னைகள் பலவீனமாகிவிட்டன. பனைகள் குறைந்த சேதத்தில் வலிமையாக நின்றன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...