திருப்பூரில் ஊதிய உயர்வு அரசாணையை எரித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

திருப்பூர் : குறைவான ஊதிய உயர்வுடன் போடப்பட்ட அரசாணைகளை எரித்து திருப்பூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : குறைவான ஊதிய உயர்வுடன் போடப்பட்ட அரசாணைகளை எரித்து திருப்பூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், தங்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினையே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குறைவான ஊதிய உயர்வுடன் போடப்பட்ட அரசாணை எண் 303 மற்றும் 234 ஆகியவற்றை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநில அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்தப் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமலிக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும் கூட, அரசாணை எரிக்கப்பட்டபோது அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்திருந்தனர். மேலும், அரசு ஊழியர்கள் என்பதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...