கோவை : கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஒருநாள் வருமானத்தை கஜா நிவாரணத் தொகையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
கோவை : கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஒருநாள் வருமானத்தை கஜா நிவாரணத் தொகையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
சலீவன் வீதியில் ராகவேந்திரா ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆட்டோ ஓட்டுனராக உள்ள சசிகுமார் ஒருநாள் ஆட்டோ ஓட்டியதில் கிடைக்க பெற்ற 2,330 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்கு காசோலையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தெலுங்குபாளையம் பகுதியில் உதவும் உள்ளங்கள் என்ற பொதுநல அமைப்பு நடத்தி வருகின்றனர். தினமும் 100 பேருக்கு தன்னுடைய பங்களிப்பு மற்றும் நண்பர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனை அருகில் மற்றும் சாலையோரங்களில் கைவிடப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும், பலமுறை இதுபோன்று முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்கி உள்ளனர், இவ்வாறு கூறினார்.
சலீவன் வீதியில் ராகவேந்திரா ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆட்டோ ஓட்டுனராக உள்ள சசிகுமார் ஒருநாள் ஆட்டோ ஓட்டியதில் கிடைக்க பெற்ற 2,330 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்கு காசோலையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தெலுங்குபாளையம் பகுதியில் உதவும் உள்ளங்கள் என்ற பொதுநல அமைப்பு நடத்தி வருகின்றனர். தினமும் 100 பேருக்கு தன்னுடைய பங்களிப்பு மற்றும் நண்பர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனை அருகில் மற்றும் சாலையோரங்களில் கைவிடப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும், பலமுறை இதுபோன்று முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்கி உள்ளனர், இவ்வாறு கூறினார்.