திருப்பூர்: பல்லடம் வாய்க்காலில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலத்துடன் கோவை நோக்கிச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் காவலர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருப்பூர்: பல்லடம் வாய்க்காலில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலத்துடன் கோவை நோக்கிச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் காவலர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பனப்பாளையத்தில் வெள்ளக்கோவிலில் இருந்த வாய்க்காலில் பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. அதனைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது கோவையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேகர் மற்றும் ஏட்டு சுதாகர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, காயமடைந்த இருவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேகர் மது அருந்திவிட்டு போதையில் வாகனத்தை இயக்கியது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பனப்பாளையத்தில் வெள்ளக்கோவிலில் இருந்த வாய்க்காலில் பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. அதனைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது கோவையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேகர் மற்றும் ஏட்டு சுதாகர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, காயமடைந்த இருவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேகர் மது அருந்திவிட்டு போதையில் வாகனத்தை இயக்கியது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.