திருப்பூர்: திருப்பூரில் தனியார் நிறுவன பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் தனியார் நிறுவன பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு பேருந்து மூலம் பல்லடத்திலிருந்து தினந்தோறும் தொழிலாளர்களை ஏற்றி வருவது வழக்கம். அதேபோல், இன்று காலை பல்லடத்திலிருந்து கிளம்பிய பேருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தது.

அப்போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்ததில் பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு பேருந்து மூலம் பல்லடத்திலிருந்து தினந்தோறும் தொழிலாளர்களை ஏற்றி வருவது வழக்கம். அதேபோல், இன்று காலை பல்லடத்திலிருந்து கிளம்பிய பேருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தது.

அப்போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்ததில் பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
