கோவை : கோவை மாவட்டம் ராஜவீதியிலுள்ள துணி வணிகர் சங்க பெண்கள் மேனிலைப்பள்ளியில் இன்று தமிழ் ஆட்சிமொழி கருத்தரங்கம் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் இரா.வேங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
கோவை : கோவை மாவட்டம் ராஜவீதியிலுள்ள துணி வணிகர் சங்க பெண்கள் மேனிலைப்பள்ளியில் இன்று தமிழ் ஆட்சிமொழி கருத்தரங்கம் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் இரா.வேங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் திரு.இரா.வெங்கடேசன் பேசியதாவது :- 1956-ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி அரசு அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகள் தமிழில் இருத்தல் வேண்டும். அலுவலர்களின் முன்பயணநிரல், நாட்குறிப்பு, அலுவலக ஆணைகள், கடிதங்கள், கோப்புகள், முத்திரைகள், பெயர்பலகைகள் ஆகியன தமிழில் இருத்தல் வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் ஆகியன ஆங்கிலத்தில் இருக்கலாம்.
ஆட்சிமொழிச் சட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட நிலை அலுவலகத்திற்குக் கேடயம் வழங்கப்படுகின்றது. சிறந்த நிலையில் கோப்புகளை எழுதுபவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் அனைவரும் இத்தகைய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.
பின்னர், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் திரு.இரா.வெங்கடேசன் பேசியதாவது :- 1956-ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி அரசு அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகள் தமிழில் இருத்தல் வேண்டும். அலுவலர்களின் முன்பயணநிரல், நாட்குறிப்பு, அலுவலக ஆணைகள், கடிதங்கள், கோப்புகள், முத்திரைகள், பெயர்பலகைகள் ஆகியன தமிழில் இருத்தல் வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் ஆகியன ஆங்கிலத்தில் இருக்கலாம்.
ஆட்சிமொழிச் சட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட நிலை அலுவலகத்திற்குக் கேடயம் வழங்கப்படுகின்றது. சிறந்த நிலையில் கோப்புகளை எழுதுபவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் அனைவரும் இத்தகைய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.