திருப்பூரில் பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவிகளை அனுமதிக்காத தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

திருப்பூர் : பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி வகுப்பறைக்குள் அனுமதிக்காத தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் : பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி வகுப்பறைக்குள் அனுமதிக்காத தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி கலந்துகொண்டார்.

அப்போது, நிர்மலா தம்பதியினர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது :- எங்களது இரு பெண் குழந்தைள் ஷர்மிதா, யாஷிகா ஆகியோர் திருப்பூர் - பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்தனர். இந்த நிலையில், பள்ளி நிர்ணயித்த ரூ. 45,000 கட்டணத்திற்கு ரூ. 32,000 செலுத்தி விட்டோம். இந்த நிலையில் எஞ்சியுள்ள ரூ.13,000 இந்தப் பருவத்துக்கு உரிய ரூ.7000-ம் செலுத்தக் கூறினர். ஆனால், போதுமான வேலை இல்லாததால், பணத்தை செலுத்த முடியவில்லை. 

எனவே, மீதித் தொகையை செலுத்த காலஅவகாசம் கேட்டோம். ஆனால், அவ்வாறு அவகாசம் தர மறுத்ததோடு கடந்த 13-ம் தேதி எங்கள் இரு பெண் குழந்தைகளுக்கும் மாற்றுச்சான்றிதழை கொடுத்து அனுப்பிவிட்டனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோதும் உரிய பதில் இல்லை. எனவே, கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாற்றுச்சான்றிதழை வழங்கிய தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளும்படி கூறியதாக மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...