கோவை : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயற்சி பெறுபவர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பயிற்சி (Internship) வழங்கிட அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயற்சி பெறுபவர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பயிற்சி (Internship) வழங்கிட அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- இந்தப் பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் 10,000 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, இந்த ஆண்டு பயிற்சி வழங்கிட ரூ.50.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விவரங்கள் www.skilltaining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விபரங்களுக்கு கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 044-22501002/22501006/22500900 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் மேற்கொண்ட இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, 'ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை -600032 என்ற முகவரிக்கு 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- இந்தப் பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் 10,000 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, இந்த ஆண்டு பயிற்சி வழங்கிட ரூ.50.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விவரங்கள் www.skilltaining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விபரங்களுக்கு கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 044-22501002/22501006/22500900 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் மேற்கொண்ட இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, 'ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை -600032 என்ற முகவரிக்கு 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.