தெலுங்குபாளையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 'குட்கா' பறிமுதல் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

கோவை : சட்டத்திற்கு புறம்பாக கோவை தெலுங்குபாளையத்தில் கிலோ கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை : சட்டத்திற்கு புறம்பாக கோவை தெலுங்குபாளையத்தில் கிலோ கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. 

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் & 2006-ன் படி நிகோடின், பான் போன்ற போதை தரும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2 டன் எடையிலான பான்பராக் மற்றும் குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 



இந்த நிலையில், தெலுங்குபாளையம் நெடுஞ்செழியன் வீதி பகுதியில் குட்கா பொருட்கள் குடோன்களில் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில், நேற்று இரவு அங்கு சென்ற கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகியான கோவை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சின்னதுரை என்பவருக்கு சொந்தமான குடோனில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைச் சோதனையில் கண்டுபிடித்தனர். 



இன்று காலை அந்த குடோனை ஆய்வு நடத்திய அதிகாரிகள் சுமார் 830 கிலோ எடையிலான புகையிலை பொருட்களைக் கைப்பற்றி குடோனுக்கு சீல் வைத்தனர். 

பின்னர், நடத்திய விசாரணையில் கோவை தாமஸ் வீதி பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் சிங் என்பவர் சின்னத்துரையிடம் குடோனை கடந்த மாதம் வாடகைக்கு எடுத்திருந்ததும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கோவைக்கு கொண்டுவந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து, கோவிந்த்சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...