திருப்பூர் : புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இந்தியாவில் முதன்முறையாக 288 கால்நடை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டதால், கால்நடைகளின் அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இந்தியாவில் முதன்முறையாக 288 கால்நடை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டதால், கால்நடைகளின் அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உழைக்கும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழாவில் காங்கயம், தாராபுரம் தொகுதிகளில் உள்ள 410 பயனாளிகளுக்கு 1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான 410 இருசக்கர வாகனங்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திருப்பூர் மாவட்டம் நத்தகாடையூர் பகுதியிலும், ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதிகளிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இப்பகுதிகளில் கால்நடைத்துறை சார்பில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இந்தியாவிலேயே முதன்முறையாக 288 கால்நடை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து கால்நடைகளும் அங்கு அடைக்கப்பட்டதால், கால்நடைகளின் அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக சிலர் கால்நடைகளை மையங்களில் விடாததால் 55 பசுக்களும், 8 காளைகளும், 5 ஆயிரம் ஆடுகளும் பலியாகியிருப்பது பதிவாகியுள்ளது. இதற்கான உரிய இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உழைக்கும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழாவில் காங்கயம், தாராபுரம் தொகுதிகளில் உள்ள 410 பயனாளிகளுக்கு 1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான 410 இருசக்கர வாகனங்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திருப்பூர் மாவட்டம் நத்தகாடையூர் பகுதியிலும், ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதிகளிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இப்பகுதிகளில் கால்நடைத்துறை சார்பில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இந்தியாவிலேயே முதன்முறையாக 288 கால்நடை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து கால்நடைகளும் அங்கு அடைக்கப்பட்டதால், கால்நடைகளின் அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக சிலர் கால்நடைகளை மையங்களில் விடாததால் 55 பசுக்களும், 8 காளைகளும், 5 ஆயிரம் ஆடுகளும் பலியாகியிருப்பது பதிவாகியுள்ளது. இதற்கான உரிய இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.